Tuesday, October 30, 2012

வாழ்க்கை பருவ காலம் .





அனல் காற்று புழுதியை  
வாரி வீசியது போல் 
எண்ணம் எனும் காற்று
சோகத்த்தை வீசிய  - மீண்டும் ஓர் 
வெயில் காலத்தை வெறுக்குது.

மனம் குளிரும் மெல்லிய 
பனி மூட்டம் கூடிய -  ஓர் 
பனிக்காலத்துக்கு
இதயம் ஏங்குது .

வாழ்க்கை எனும் என் செடிக்கு 
உயிர் கொடுக்க -ஓர் 
இளவேனில் காலத்துக்காய் 
வேண்டி நிற்கிறது.

மனப்பரப்பை ஜெயிக்கும் 
எண்ணம் படைத்த 
உறைபனி மூடியிருக்கும்  -
ஓர் பின்பனிக் காலம் 
தொடர வேண்டியது 

விழியில் விழி நீர் உற்றெடுக்க  - 
ஓர் மழைக் காலத்துக்காய் 
ஏங்குது .

வாழக்கை எனும் செடியில் உள்ள
வாடிய மலர் போன்ற என் மனம் - 
ஓர் வசந்த காலத்துக்காய்
ஏங்குது .








0 comments:

Post a Comment