பிறப்பெனும் கரையில் ஆரம்பித்த
இறப்பெனும் மறு கரையில் முற்றும்
-இப்பயணம்
ஏறினேன் ஓர் படகில்
வழிகாட்டியாய் நல்லதோர்
படகோட்டியும் ,
இணைந்தனர் புதிய முகங்களும்
கழிந்தது ஆறு மாத பயணம்
கடலில் மிதக்கும்
காகித ஓடம் போன்று
என் இலக்குகள் தத்தளிக்க
ஆழ்கடலில் தோன்றிய
மாய விம்ப சாயலிலான
உள்மனம்
என்னை அழைக்க
நானோ செய்வதறியாது
குதித்தேன் - அழ்கடலில்
வரும் ஓர் படகுக்காய்
காத்திருக்கிறேன்
இலக்கை அடைவேனோ..!!
இல்லையேல்
மீண்டும் கரையை
அடைவேனோ ..!!








0 comments:
Post a Comment