Wednesday, October 24, 2012

இப்பயணம்




பிறப்பெனும்  கரையில் ஆரம்பித்த 
இறப்பெனும் மறு கரையில் முற்றும் 
-இப்பயணம் 

ஏறினேன் ஓர் படகில் 
வழிகாட்டியாய் நல்லதோர் 
படகோட்டியும் , 
இணைந்தனர் புதிய முகங்களும் 
கழிந்தது ஆறு மாத பயணம் 

கடலில் மிதக்கும் 
காகித ஓடம் போன்று 
என் இலக்குகள் தத்தளிக்க

ஆழ்கடலில் தோன்றிய 
மாய விம்ப சாயலிலான 
உள்மனம் 
என்னை அழைக்க 

நானோ செய்வதறியாது  
குதித்தேன் - அழ்கடலில்

வரும் ஓர் படகுக்காய் 
காத்திருக்கிறேன் 
இலக்கை அடைவேனோ..!!
இல்லையேல் 
மீண்டும் கரையை 
அடைவேனோ ..!!

0 comments:

Post a Comment