Tuesday, October 30, 2012

வாழ்க்கை பருவ காலம் .





அனல் காற்று புழுதியை  
வாரி வீசியது போல் 
எண்ணம் எனும் காற்று
சோகத்த்தை வீசிய  - மீண்டும் ஓர் 
வெயில் காலத்தை வெறுக்குது.

மனம் குளிரும் மெல்லிய 
பனி மூட்டம் கூடிய -  ஓர் 
பனிக்காலத்துக்கு
இதயம் ஏங்குது .

வாழ்க்கை எனும் என் செடிக்கு 
உயிர் கொடுக்க -ஓர் 
இளவேனில் காலத்துக்காய் 
வேண்டி நிற்கிறது.

மனப்பரப்பை ஜெயிக்கும் 
எண்ணம் படைத்த 
உறைபனி மூடியிருக்கும்  -
ஓர் பின்பனிக் காலம் 
தொடர வேண்டியது 

விழியில் விழி நீர் உற்றெடுக்க  - 
ஓர் மழைக் காலத்துக்காய் 
ஏங்குது .

வாழக்கை எனும் செடியில் உள்ள
வாடிய மலர் போன்ற என் மனம் - 
ஓர் வசந்த காலத்துக்காய்
ஏங்குது .








Wednesday, October 24, 2012

இப்பயணம்




பிறப்பெனும்  கரையில் ஆரம்பித்த 
இறப்பெனும் மறு கரையில் முற்றும் 
-இப்பயணம் 

ஏறினேன் ஓர் படகில் 
வழிகாட்டியாய் நல்லதோர் 
படகோட்டியும் , 
இணைந்தனர் புதிய முகங்களும் 
கழிந்தது ஆறு மாத பயணம் 

கடலில் மிதக்கும் 
காகித ஓடம் போன்று 
என் இலக்குகள் தத்தளிக்க

ஆழ்கடலில் தோன்றிய 
மாய விம்ப சாயலிலான 
உள்மனம் 
என்னை அழைக்க 

நானோ செய்வதறியாது  
குதித்தேன் - அழ்கடலில்

வரும் ஓர் படகுக்காய் 
காத்திருக்கிறேன் 
இலக்கை அடைவேனோ..!!
இல்லையேல் 
மீண்டும் கரையை 
அடைவேனோ ..!!

Saturday, October 6, 2012

என் கவிதையும் அர்த்தமுறும்.




படிக்காத கவிதைக்கு 
அர்த்தம் இல்லை 
அது போல் என் 
காதலும் அர்த்தமற்றதாய் 
போகுமோ .!!!

என் கவிதைக்கு 
அர்த்தம் கிடைக்கும் 
தருணம்
நாம் விரல் கோர்த்து 
நடக்கும் 
காலம் 

அன்று 
என் கரு விழி 
திரையிடும் உன் விம்ப 
நினைவுச்சாரளுக்கு 
முற்று புள்ளி .