Thursday, August 30, 2012

கைகள் ஒன்று கூடாதோ ...



மலர் மீது உள்ள குழி போல்
நீ புன்னகைக்கும் கணத்தில் உதிக்கும் 
கன்னக்குழியில் தானா ..

அதிகாலையில் செடிக்கு 
ஊற்றும் நீரின்
குளிர்மையில் தானா ..

நொடிப்பொழுதில் ஆயிரம் 
கதை பேசும் 
உன் விழி அசைவில் தானா ..

என்னுடன் பேசிய 
பதுமையனா 
மொழியில் தானா ...

என்  உவமைக்குள் அடங்காதது 
 நீ என் மீது கொண்ட 
பாசத்தில் தானா ..

என் மனம் கரைந்தது ..!!

0 comments:

Post a Comment