Thursday, August 30, 2012

கைகள் ஒன்று கூடாதோ ...



மலர் மீது உள்ள குழி போல்
நீ புன்னகைக்கும் கணத்தில் உதிக்கும் 
கன்னக்குழியில் தானா ..

அதிகாலையில் செடிக்கு 
ஊற்றும் நீரின்
குளிர்மையில் தானா ..

நொடிப்பொழுதில் ஆயிரம் 
கதை பேசும் 
உன் விழி அசைவில் தானா ..

என்னுடன் பேசிய 
பதுமையனா 
மொழியில் தானா ...

என்  உவமைக்குள் அடங்காதது 
 நீ என் மீது கொண்ட 
பாசத்தில் தானா ..

என் மனம் கரைந்தது ..!!

Friday, August 17, 2012

காதல் நெய்தது.....


உன்னில் நான் கொண்ட உறவை 
சொந்தம் கடந்த காதல் நெய்தது ,
நீ வடக்கிலும் 
நான் மேற்கிலும் 
என்ன அதிசம் தூரம் 
நம்மை பிரித்தலும் , 


நொடி பொழுது உன்னை நினைத்தால்
உன்னருகில்  நான் இருப்பதை உணர்கிறேன் ,
நிழல் கடந்து 
நிஜத்தில் வாழும் 
வரத்தை தினம் வேண்டுகிறேன்