Friday, June 22, 2012

நம் உறவால் உறவாவோம்



உன் புன்னகையால் என்னை அபகரித்தாய்
உன் மொழியை என்னில் இசைத்தாய்
உன் கன்னக்குழியில் என்னை புதைத்தாய்

என் தனிமையை நீ ரசிக்க வைத்தாய்
என் கனவுகளுக்கு உயிர் கொடுத்தாய்
என் உயிரில் பாதி ஆனாய்

நாம் என்ற வார்த்தைக்கு
அர்த்தம் புகட்டினாய்

என்னில் நீயும்
உன்னுள் நானுமாய்
நம் உறவால் உறவாவோம்






0 comments:

Post a Comment