உன் புன்னகையால் என்னை அபகரித்தாய்
உன் மொழியை என்னில் இசைத்தாய்
உன் கன்னக்குழியில் என்னை புதைத்தாய்
என் தனிமையை நீ ரசிக்க வைத்தாய்
என் கனவுகளுக்கு உயிர் கொடுத்தாய்
என் உயிரில் பாதி ஆனாய்
நாம் என்ற வார்த்தைக்கு
அர்த்தம் புகட்டினாய்
என்னில் நீயும்
உன்னுள் நானுமாய்
நம் உறவால் உறவாவோம்
0 comments:
Post a Comment