Friday, June 22, 2012

நம் உறவால் உறவாவோம்



உன் புன்னகையால் என்னை அபகரித்தாய்
உன் மொழியை என்னில் இசைத்தாய்
உன் கன்னக்குழியில் என்னை புதைத்தாய்

என் தனிமையை நீ ரசிக்க வைத்தாய்
என் கனவுகளுக்கு உயிர் கொடுத்தாய்
என் உயிரில் பாதி ஆனாய்

நாம் என்ற வார்த்தைக்கு
அர்த்தம் புகட்டினாய்

என்னில் நீயும்
உன்னுள் நானுமாய்
நம் உறவால் உறவாவோம்






Sunday, June 17, 2012

உனக்காய் வாழ்கிறேன் ..



நம்முள் இடைவெளி
அதிகரிக்க கணக்கிறேன் ...

விழிகள் தாங்கும்
உன் கனவுகளை
தினமும் ரசிக்கிறேன் ...

உன்னை சேரும்
கணத்துக்காய்
கனவை யாசிக்கிறேன் ..

என்னியவளே -
இருவரும் 
கலந்து கரையும்
நொடிக்காய் காத்திருப்பேன் .............

Thursday, June 7, 2012

அவள் தான்...



என்னுள் அவள் நுளைந்தாள்
நான் கற்பனையில் மிதந்தேன்
என்னை இழந்தேன்
பூவை போன்ற
மென்மையானவள்
ஆயினும்
என்னை புரிந்தவள்
அவள் தான்... .