ஒரு மூங்கில் காட்டையே அழித்து
ஒரே ஒரு புல்லாங்குழல் செய்தேன் ...
ஊதும் போது தான் தெரியும்
அது உன்னை போல் ஊமை என்று ....
ஆனால் அதை ஊதுவதால் அதன் இசையில்
என் மனம் ஏதோ நிறைவு அடைகிறது .
முன்னைய நாளில் அன்னையே... !
நீ
என் முதுகில் ஏற்றிய
புத்தக பையை சுகமாய்
சுமந்தேன் எதிர்காலத்தில் உன்னையும் சுமபேன் என்ற நம்பிக்கையோடு
இன்னும் அந்த நம்பிக்கையில் தான் நான் உயிர் வாழ்கிறேன்...
நான் காணும் பொருள்
எல்லாம் நீயாக வேண்டும்
நீ வாங்கும் பொருள்
எல்லாம் நானாக வேண்டும்
நான் பேச நினைப்பது எல்லாம்
உன்னை பற்றியதாய் அமைதல் வேண்டும்
நீ பேசும் மொழியாய் நான் இருத்தல் வேண்டும்
கனவிலும் உன் முகம் காணல் வேண்டும்
உன்னோடு நான் ஆனால் போதும் ....!!