Friday, February 25, 2011

ஓர் உறவு



என்னவளே 
நீ என் உறவு அது இயற்கையின் நியதியால் 
நம் உறவில் ஓர் உறவு தேடுகிறேன் 
அது நம்மில் ஓர் புதிய அத்தியாயம் .


Monday, February 21, 2011

விழியீர்ப்பு விசை



உன் கண்களை காண  துடிக்கும் -என் விழிகள் 
உன்னை கண்டதும் எனையறியாமல் ஆயிரம் கதைகள் பேசுகிறது 
உன் கண்ணின் விழியீர்ப்பு விசை இதுவா...!!




Saturday, February 5, 2011

காலைப்பொழுது ..


அழகிய பனிவிழும் நேரம் இது 
குளிர்மையான இளம் தென்றலால் தானோ 

பூக்கள் புன்னகைக்கும் நேரம் இது 
கதிரவனின் வரவில் தானோ 

நாளின் ஆரம்பம் இது -இயற்கை 
அன்னையின் கொடை இதுவா ..!!

உன் நினைவுகள்..



என்னை கேட்டா நீ என்னில் கலந்தாய் - ஏன் 
என்னை கேட்காமல் என்னை கலங்க  வைக்கிறாய் 
உன் நினைவுகளை மட்டும் ஏன் என்னிடம் விட்டு சென்றாய்
உன் நினைவுகள் என்னை ரணமாய் கொல்வதற்கா....



Friday, February 4, 2011

மௌனம்...


என் மௌனத்தையே உன்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் ...
என் வார்த்தைக்குள் ஒளிந்திருக்கும்
 நம் காதலை எப்படி நீ புரிந்து  கொள்வாய் ..

Wednesday, February 2, 2011

அழகான தேவதை


உன்னைப் போல் அழகானவள் 
இவ்வுலகில் கிடையாது எனக்கு 
நீ தான் என் இதயத்தில் 
குடியிருக்கும் அழகான தேவதை 
நீ எப்போது என் சொந்தம் ஆவது...???

என் மனம் ...


ஒரு மூங்கில் காட்டையே அழித்து
ஒரே ஒரு புல்லாங்குழல் செய்தேன் ...
ஊதும் போது தான் தெரியும்
அது உன்னை போல் ஊமை என்று ....
ஆனால் அதை ஊதுவதால்
அதன் இசையில்
என் மனம் ஏதோ நிறைவு அடைகிறது .

நம் உறவு ...!!



நிலையான அன்புக்கு பிரிவில்லை …
சொல்லாத சொல்லுக்கு அர்த்தமில்லை …
தேடும் பாசத்துக்கு தோல்வி இல்லை …
உண்மையான நம் உறவுக்கு மரணம் இல்லை...

நம்பிக்கை ....



முன்னைய நாளில் அன்னையே... !
நீ
என் முதுகில் ஏற்றிய
புத்தக பையை சுகமாய்
சுமந்தேன் எதிர்காலத்தில்
உன்னையும் சுமபேன் என்ற நம்பிக்கையோடு
இன்னும் அந்த நம்பிக்கையில் தான் நான் உயிர் வாழ்கிறேன்...

என் கனவுகள் ..!!


நான் காணும் பொருள்
எல்லாம் நீயாக வேண்டும்
நீ வாங்கும் பொருள்
எல்லாம் நானாக வேண்டும்

நான் பேச நினைப்பது எல்லாம்
உன்னை பற்றியதாய் அமைதல் வேண்டும்
நீ பேசும் மொழியாய் நான் இருத்தல் வேண்டும்

கனவிலும் உன் முகம் காணல் வேண்டும்
உன்னோடு நான் ஆனால் போதும் ....!!

வாழ்க்கையில்....





காதலிக்கவில்லை காதலில் தோற்பதற்கு 
அதிகமாய் ஆசைப்படுவதில்லை ஆசையில் தோற்பதற்கு
அதிகமாய் கல்வி கற்பதில்லை கல்வியில்  தோற்பதற்கு 
ஆனால் வாழ்க்கையில் தோற்றதாய் எண்ணுகிறேன் ....