Wednesday, November 30, 2011

கல்லூரியா ..!!



கல்லூரி எங்கும் காதல் 
பூந்தோட்டம் பூத்து குழுங்கிறது- தினமும் 
புதிதாய்  பூக்கும் பூக்களும் ,
வாடி விழும் வாடழுமாய் -காதல்
பூப்பதும் வாடுவதுமாய் 
இளம்  காதல் நிறைந்த
 மாய உலகமாய் -என் கல்லூரி 


இதில் பூரிப்பு உற்ற  எம் 
ஆய்வு கூட கணினியும் காதல் மொழி 
பேசுகிற போல் உணர்வு ..
இருக்கைகள் எங்கும் இரு 
இதயங்களின் சேரல் ,பகிர்வு -
காதலின் சின்னம் தாஜ்மஹால் கூட 
தோற்றிடுமோ என  எண்ண தோன்றும்...
கல்வியுடன் காதலின்
 இருப்பிடம் -கல்லூரியா ..!!

Friday, November 11, 2011

மாயை



மெய்யாய் நானும் மாயமாய்  நீயும் 
காதலித்தோம் 
காலங்கள் இதற்க்கு சாட்சி -யடி 
என் காதலியே ..

இரவு சூழ்ந்ததும் கனவுகள் முழுவதும் 
விடிந்ததும் காணும் பொருள் எல்லாம் 
உன் விம்பம் என் விழித்திரையில் -யடி 
என் காதலியே ..


நிலவொளியில் நான் உன்னுடன் கதை 
பேசிக்கொண்டு இருந்தேன் மணி நேரம் கூட
நொடியாய் விரைய என்னுள் நீ கலந்தாய் 
என்ன மாயம் மணி நேரமும் என் நிழலுடன் -யடி
என் காதலி ...

காதல் எனும் மாய மலர் வனத்தை
என்னுள் அமைத்து புதிய மாய உலகம்
 உணர வைத்தாள் -மாயை