Wednesday, August 31, 2011

என் காலச்சக்கரம்


வரும் காலத்துக்கு முகவரி என்ன
என்று காலத்திடம் வினாவ
ஒரு நிமிடம் நிசப்தம்  அடைகிறது 
என் உளம்
விழிகள் எனும் இல்லத்தின் 
இமைகள் என்னும் கதவுகளை
 மெல்ல திறந்து விழிநீர்த்  துளி  
என் உடலை  மெல்ல நனைக்கிறது
அப்போது 
ஒரு கணம் என் சப்தம் அற்ற  உள்ளம்
என்னிடம் வினாத் தொடுக்கிறது 
நீ உன்னுள் செய்த  
சத்தியங்களின் நிலை என்ன ??...
பெரு மூச்சு விட்டபடி
கரங்கள் கன்னத்தை தடவுகிறது ...
இவ்வாறாக தினமும் என் காலச்சக்கரம் சுழல்கிறது ....