
எதிர் பார்ப்புக்கள் இல்லாத வாழ்க்கை
இங்கு எவருக்கும் இல்லை
எதிர் பார்ப்புக்கள் உள்ள வாழ்க்கை
என்றும் இன்பத்தை தராது
இந்த உலகத்தில் எவையும்
எமக்கு சொந்தம் இல்லை
சொந்தமாய் உள்ளவை என்றும்
நிரந்தரம் அற்றது
பணம் இருந்தால் உன்னை
உனக்கு தெரியாது
பணம் இல்லாதவனை உலகம்
திரும்பியும் பார்க்காது
உணர்வுகள் ஒழித்து வைத்தால்
நிம்மதி இல்லை
உணர்வுகள் வெளிப்படும் போது
சோகம் குறைகிறது
தூ ங்கிவிட்டால் உலகம் உன்னை
விட்டு சென்றுவிடும்
தோன்றவில்லை ஏன் இந்த வாழ்க்கை என்று














