Wednesday, July 20, 2011

ஏன் இந்த வாழ்க்கை



எதிர் பார்ப்புக்கள் இல்லாத வாழ்க்கை 
இங்கு எவருக்கும் இல்லை 
எதிர் பார்ப்புக்கள் உள்ள வாழ்க்கை 
என்றும் இன்பத்தை தராது 
இந்த உலகத்தில் எவையும் 
எமக்கு சொந்தம் இல்லை 
சொந்தமாய் உள்ளவை என்றும் 
நிரந்தரம் அற்றது 
பணம் இருந்தால் உன்னை 
உனக்கு தெரியாது 
பணம் இல்லாதவனை உலகம் 
திரும்பியும் பார்க்காது 
உணர்வுகள் ஒழித்து வைத்தால்
நிம்மதி இல்லை 
உணர்வுகள் வெளிப்படும் போது
சோகம் குறைகிறது 
தூ ங்கிவிட்டால் உலகம் உன்னை 
விட்டு சென்றுவிடும் 
தோன்றவில்லை ஏன் இந்த வாழ்க்கை என்று 



Wednesday, July 13, 2011

உறவு



செல்வமும் ,மகிழ்ச்சியும் இருக்கும்
போது கூடும் உறவு ,
துன்பமும் ,வறுமையும் நம்மை நெருங்கும்
போது விலகுகிறது. 
அதை கண்டதும் 
தென்றலைவிட கனமற்ற என் உள்ளம் 
கனம் ஏறியதை உணர்கிறேன் .


Monday, July 11, 2011

பிறந்த நாள் வாழ்த்துக்கள்


அன்று என்னை கண்டதும் நீ 
இன்று உன்னை கண்டதும் நான் 
ஏனெனில் இந்நாள் 
அம்மா உன் பிறந்த நாள் 

என் கலங்கள் ஒவ்வொன்றும் இன்று 
உனக்கு வாழ்த்து சொல்கிறது என்னை அறியாமல் 

Tuesday, July 5, 2011

விழிநீர்



படிக்க கணணி முன் அமர்ந்தால்

திரையில் உன் உருவம் ,என் 
விழிகளில் என்னை அறியாமல் 
நீர் வழிகிறது ...